×

சிவகாசியில் பூட்டி கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம்: திறக்க கோரிக்கை

 

சிவகாசி, அக்.10: மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி மாநகராட்சியில் சேர்மன் சண்முகம் சாலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் வசதிக்காக மகளிர் சுகாதார வளாகம் கட்டி பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. அந்த பகுதி குடியிருப்பு வாசிகள், சாலையோர கடை விற்பனையாளர்கள், நகருக்குள் வரும் ஏாளமான பெண்கள் இந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சுகாதார வளாகம் காலை மற்றும் மாலை நேரங்களில் திறக்கப்பட்டது. தற்போது முறையாக சுகாதார வளாகம் திறக்காமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சுகாதார வளாக கட்டடம் இருந்தும் பயன்பாட்டிற்கு கொண்டு வராததால் அப்பகுதி பெண்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, அந்த பகுதி பெண்கள் நலன் கருதி, மகளிர் சுகாதார வளாகத்தை தினமும் திறந்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post சிவகாசியில் பூட்டி கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம்: திறக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Women's Health ,Sivakasi ,Sivakasi… ,
× RELATED சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!!